புனிதர்களை நோக்கி செபம்

அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்

எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம்.  ஆமென்.

புனித தோமையார் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இறையன்னையை மிகவும் அன்பு செய்த அப்போஸ்தலரான புனித தோமையயாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கலிலேயா நாட்டில் பிறந்த புனித தோமையாரே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முடிவில்லா அமைதி தரும் நற்செய்தியைப் போதித்த புனித தோமையாரே.

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இளம் வயதிலேயே தந்தையின் சொற்படி அவர் தொழிலை நடத்திக் கொண்டு வந்த புனித தோமையாரே.
இயேசு மெய்யாகவே உலக மீட்பரென்று விசுவாசம் கொண்ட புனித தோமையாரே.
இயேசு தம்முடைய சீடர்களுக்குள்ளே ஒருவராகத் தெரிந்து கொண்ட புனித தோமையாரே.
இயேசுவின் மீது கொண்டிருக்கும் பற்றுதலால் #8220;நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்!” என்று கூறிய புனித தோமையாரே.
ஆண்டவரே, நீர் போகிறதற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்ற வினாவை எழுப்பி, #8220;வழியும் உண்மையும் வாழ்வும் நானே!” என்ற இயேசுவின் பதிலைப் பெற்ற புனித தோமையாரே.
இயேசு உயிர்த்த பிறகு #8220;நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்!” என்ற புனித தோமையாரே
அவர் உமக்குத் தோன்றியதும் அவரைக் கண்டு மகிழ்ந்து #8220;நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்!” என்று சொன்ன புனித தோமையாரே.
இயேசு, #8220;தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்!” என்று சொல்லக் கேட்ட புனித தோமையாரே.
தூய ஆவியாரால் ஏவப்பட்டு இறையன்னையும் அப்போஸ்தலர்களும் கூடிய சபையிலே மேதியா முதலான நாடுகளில் நற்செய்தியைப் போதிக்கக் குறிப்பிடப்பட்ட புனித தோமையாரே.
இறையன்னையின் அடக்கத்துக்கு மிகவும் ஆவலுடனே ஓடி வந்த புனித தோமையாரே.
மாபெரும் மகிழ்ச்சியோடே இயேசுவுக்கு உயிரை ஒப்புக் கொடுத்து பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டவர் போல உமது இரத்தத்தைச் சிந்தி திருமறைக்காக உயிரைக் கொடுக்க விரும்பிய புனித தோமையாரே.
மண்ணுலகில் உள்ள எல்லா பொருள்களையும் உம்மையும் விட இறைவனை அதிகமாக அன்பு செய்த புனித தோமையாரே.
வேற்று நாடுகளிலே உமக்கு வரப்போகிற வேதனைகளையும் தடைகளையும் எண்ணி மகிழ்ச்சி கொண்ட புனித தோமையாரே.
இயேசுவையும் இறையன்னையையும் நினைத்து இரவும் பகலும் விண்ணகத்தை நோக்கிக் கையேந்திக் கொண்டு இடைவிடாமல் செபித்த புனித தோமையாரே.
தூய ஆவியாரால் ஏவப்பட்டு மக்களுக்குத் திருவுரையாற்றும்போது வானத்தூதர் போல காணப்பட்ட புனித தோமையாரே.
உயிரையும் உடலையும் தத்தம் செய்து, படாத பாடுபட்டு, மக்களை மெய்மறையில் சேர்க்க ஆவல்கொண்ட புனித தோமையாரே.
விண்ணுல வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய புனித தோமையாரே.
மூன்று அறிஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து அவர்களை மெய்மறையில் சேர்த்த புனித தோமையாரே.
பார்த்தியா நாட்டிலே மக்கள் மெய்மறையைக் கண்டடையச் செய்த புனித தோமையாரே.
மேதியா நாட்டிலேயும் பெர்சியா நாட்டிலேயும் வெகு துன்பப்பட்டு ஈடேற்றத்தின் வழியிலே திருப்பிக் கொண்டு வந்த புனித தோமையாரே.
ஈக்கானியா நாட்டிலே வந்த சோதனைகளை எல்லாம், அன்பினாலும், செபத்தினாலும் வென்று, அஞ்சா நெஞ்சத்தவராய் திருமறையை அவர்களுக்குப் போதித்த புனித தோமையாரே.
எத்தியோப்பியா நாட்டுக்கு ஒளியாக நின்ற புனித தோமையாரே.
சிந்து தேசத்தில் கந்தபோரஸ் அரச குடும்பத்துக்குத திருமுழுக்குக் கொடுத்து ஞான ஒளி பெருகச் செய்த புனித தோமையாரே.
கடலில் சுற்றி வந்த பிரமாண்டமான மரத்தை உமது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டித் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்து இழுந்துக் கொண்டு வந்து கரையிற் சேர்ந்த புனித தோமையாரே.
இறந்த குழந்தையை இறைவனுடைய அருளாலே உயிர்ப்பித்தவரான புனித தோமையாரே
இயேசுவுக்கான பணிகளை எல்லாம் மகா அன்போடும் தாழ்ச்சியோடும் செய்த புனித தோமையாரே.
உமக்குப் பின் புனித சவேரியார் பாரத நாட்டுக்கு வரப்போகிறதை தொலைப் பார்வையால் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தின புனித தோமையாரே.
ஈட்டியால் குத்தப்பட்டு பெருமகிழ்வோடே மறைச்சாட்சி முடி பெற்று முடிவில்லாக் காலம் வாழ விண்ணுலகிற்குச் சென்ற புனித தோமையாரே
கிறிஸ்துவில் நாங்கள் உறுதியான விசுவாசம் கொள்ளும்படியாக, புனித தோமையாரே.
கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும் பரவும் படியாக, புனித தோமையாரே.
உமது திருவடியைத் தாங்கிய பாரதநாடு மனம் திரும்பும்படியாக, புனித தோமையாரே.

உலகின் பாவங்களைப் போக்குகிறரூhநடடip;ரூhநடடip;ரூhநடடip;மற்றதும்,
மு. ரூனெயளர் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
து. ரூனெயளர் புனித தோமையாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
தந்தையே, எங்கள் பாரத நாட்டிற்கு உமது நற்செய்தியை முதன்முதல் கொணர்ந்த புனித தோமையார் எங்கள் நாட்டிலே மறைபரப்பி, இரத்தம் சிந்தி, அடக்கமானார் என்பதைப் பெருமையுடன் கொண்டாடி உம்மைப் புகழ்கின்றோம். குhலங்காலமாக உண்மைக் கடவைள பல்வேறு வகைகளில் தேடியலைந்து கொண்டிருக்கும் இந்தியராகிய நாங்கள், புனித தோமையாரின் வேண்டுதலால் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று கண்டு. #8220;நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டு அவர் திருவடிகளில் சரணடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென்.

புனித இஞ்ஞாசியார் திருநாளுக்கு முன் நவநாள் செபம்

இயேசு சபையை நிறுவியவரும் மரியன்னையின் அன்புத் தொண்டருமாயிருக்கிற புனித இஞ்ஞாசியாரைக் குறித்து ஒன்பது மன்றாட்டுகளைக் கேட்கிறது.

1.       புனித இஞ்ஞாசியாரே! இயேசுவின் மகிமை உலகமெங்கும் விளங்கவும். கோடா கோடி மக்கள் மீட்புப் பெறவும், இயேசு சபையை உண்டாக்கவும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தீரே: நீர் தொடங்கிய சபை உலகமெங்கும் தடை இல்லாமல் பரவவும், ஆண்டவருடைய புகழ் விண்ணுலகில் போல மண்ணுலகிலும் பெருக வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி.

2.       இயேசுவின் அன்புப் படைத்தலைவராய் இருக்கிற  புனித இஞ்ஞாசியாரே! தீய சக்திகளை அடக்கி ஒடுக்க வல்லமையைக் கொண்டிருக்கிறீரே. இந்த நாட்டிலுள்ள தீமை முழுவதும் சரிந்து இயேசுவின் திருப்பெயர் தடையின்றி விளங்கும்படிக்கு உம்மை மன்றாடுகிறோம்.
ரூனெயளர் பர. அருள். திரி.

3.       ஆன்மாக்களை மீட்பதில் மிகுந்த கருத்தும் கூர்மதியும் கொண்டிருக்கிற புனித இஞ்ஞாசியாரே! திருச்சபைக்கு உதவி செய்கிறவர்களுக்கும், குருக்கள், . துறவியர், வேதியர்களுக்கும், பெரியவர்களுக்கும் வேண்டிய தூய கருத்தையும் கூர் மதியையும் தந்தருளவேணும் என்று உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி.

4.      இயேசுவின் அன்பு மைந்தராய் இருக்கிற புனித இஞ்ஞாசியாரே! தவறுகளைத் தாக்கும் சம்மட்டியென்கிற விருதைச் சிறப்பாக உம்மிடத்திலே விளங்கச் செய்தீரே. பற்பல நாடுகளிலேயும் சிறப்பாக இந்நாட்டிலுமுள்ள ஒழுக்கக் கேடான போதகங்கள் சிதைந்து அழிய வேணுமென்று உம்மை மன்றாடுகின்றோம். ரூனெயளர் பர. அருள். திரி.

5.       இளகாத மனதுடைய பாவிகளை உம்முடைய ஒறுத்தலையும் கடின தவத்தையுங்கொண்டு மனந்திருப்பின் புனித இஞ்ஞாசியாரே! பாவத்தில் நிலைகொண்டவர்கள் மனம் திரும்பவும் விசுவாமின்றிக் கெடுகிறவர்கள் பிடிவாதம் தீர்ந்து உறுதியான விசுவாசத்தைக் கொள்ளவும் வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி.

6.       புனித இஞ்ஞாசியாரே! கடலிலும் நிலத்திலும் வேதனைப்படும் எல்லாருடைய இன்னல்களையும் விலக்கி வந்தீரே. இந்த நாட்டிலுள்ள பஞ்சம், படை பெருவாரிக்காய்ச்சல் துன்ப துயரங்களிலே அவதிப்படுகிறவர்களுடைய பொல்லாப்பு நீங்க வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். பர. அருள். திரி.

7.       புனித இஞ்ஞாசியாரே! இறை பக்தியினுடைய மிகுதியினாலே இறைவனுடைய அளவற்ற நன்மைத் தனங்களைத் தெளிவோடே தியானித்து மனிதரெல்லாரும் கரையேறவேணும் என்கிற ஆவலை நிறைவாய்க் கொண்டிருந்தீரே! எங்கள் மக்கள் அனைவரும் மெய்மறையை அறியவும், கிறிஸ்துவர்கள் எல்லோரும் விசுவாசம் உள்ளவர்களாக வாழவும் வேண்டும் என்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி.

8.       புனித இஞ்ஞாசியாரே! மிகுந்த கீழ்ப்படிதலைக் காட்டி நடந்ததுமல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் இந்த நற்பண்பிலே வளரவும் மிகவும் முயற்சி செய்தீரே! நாங்கள் எல்லோரும்; கீழ்ப்படிகிற நற்பண்பை எந்நாளும் கைக்கொண்டிருக்க வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி.

9.       புனித இஞ்ஞாசியாரே! இந்த உலகத்திலே வாழ்ந்தபோது இறைவனுக்கு புகழ் உண்டாகவும் மக்கள் ஈடேறவும் எடுத்த முயற்சிகள் பலிக்க இப்போது விண்ணுலகிலே ஆண்டவரிடமாக மன்றாடி, நாங்கள் எல்லோரும் விசுவாசம், பக்தி, நம்பிக்கையிலே வளர்ந்து கொண்டு வரவும் நல்ல மரண மடையவும் உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் பர. அருள். திரி.

          புனித இஞ்ஞாசியாரே! பாவிகளாகிய நாங்கள் செய்த இந்த ஒன்பது பரலோக மந்திரமும் ஒன்பது அருள் நிறைந்த மந்திரமும் உம்முடைய திருவடியிலே காணிக்கையாக வைக்கிறோம். நீர் உம்முடைய நற்பண்புகளோடே கூட இயேசுவின் திருவடியில் இவற்றைக் காணிக்கையாக வைத்து, இந்த ஒன்பது நாளும் நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களை இறைவன் உம்மை முன்னிட்டு எங்களுக்கு அருள வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். ரூனெயளர் ஆமென்.

புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

இறைவனின் அதிமிகப் புகழை இப்பூவுலகில் பரவச் செய்வதற்கும், எண்ணிக்கையில்லாத மக்களை விண்ணுலகில் சேர்ப்பதற்கும் இறைவன் தேர்ந்தெடுத்த புனித இஞ்ஞாசியாரே! எளியேனுக்குத் தகுதியில்லை என்றாலும், உம் பேரிலுள்ள நம்பிக்கையாலும் உமது செல்வாக்கு வல்லபத்தாலும் ஏவப்பட்டு உமது சரணமாய் ஓடி வந்தேன். நீர் என் பாதுகாவலராயிருந்து என்னைக் காத்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஏனெனில் என் வாழ்நாளையும் என் இறுதி நேரத்தையும் உமக்கே ஒப்படைத்து விடுகிறேன். சோதனை வேளையில் எனக்கு ஆதரவாயிரும். இறைவன் திருமுன் பரித்துரைத்து என் குறைகளைப் போக்கியருளும். சிறப்பாக என் செயல்களையெல்லாம் அர்ச்சித்து பேறுபலனுள்ளனவாக்கி விண்ணுலகப் பரிசை உறுதிப்படுத்தும் வலிமையாகிய உத்தம இறையன்பை எனக்காகக் கேட்டுத் தந்தருளும். ரூனெயளர் ஆமென்.

தொத்து நோய் அகலப் புனித இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

          மாட்சிமை தங்கிய முதுபெரும் தந்தையாகிய புனித இஞ்ஞாசியாரே! பஞ்சம், வறுமை, நோய் போன்ற கொடுமைகளிலிருந்தும், சாவைத்தரும் தொத்து நோயினின்றும், சிறப்பாக கொடிய பாவத்தினின்றும் எங்களைக் காப்பாற்ற இறைவனின் திருமுன் பரிந்துரைக்கக் கருணை புரிந்தருளும். நாங்கள் உமது நன் மாதிரியைப் பின்பற்றி இறைவனுடைய அதிமிகப் புகழுக்காவும், மக்களின் மீட்புக்காகவும் வருந்தி உழகை;க உறுதியான ஆவலை எங்களுக்குத் தந்தருளும். கடைசியாய் இயேசுவின் திரு இதயம் எங்கள்பேரில் இரங்கி, அனைத்துக்கும் கொடுமுடியான நிலைமை வரத்தையும் விண்ணுலகப் பேற்றையும் எங்களுக்குக் கட்டளையிட்டருள எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ரூனெயளர் ஆமென்.

புனித இஞ்ஞாசியார் மன்றாட்டு மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் புனித இஞ்ஞாசியாரை மிகவும் ஆசிர்வதித்து வழிநடத்திய அமலோற்பவ அன்னையே.
இயேசு சபையை நிறுவியவரான புனித இஞ்ஞாசியாரே.
ஸ்பெயின் நாட்டிலே, லொயோலா கோட்டையிலே பிறந்தவரே.
இராணுவத்தில் பணிhயற்றியபோது, பம்பலோனா முற்றுகையில் குண்டடிப்பட்டவரே.
மருத்துவ மனையில் கிறிஸ்துவின் வரலாற்றையும், புனிதர்களின் வரலாற்றையும் வாசித்து, இறைவன்பால் முற்றும் திரும்பியவரே.
ஓராண்டு காலம் மன்ரேசாவில் ஒருவந்தியாக வாழ்ந்தவரே.
இறைவனின் திருவுளத்தை அறிய, புனித நாட்டுக்குப் பயணமானவரே.
33 வயதிலே பார்சலோனா பள்ளியில் சேர்ந்து, இலத்தீன் மொழி பயின்றவரே.
11 ஆண்டுகளாக பல்வேறு பல்கலைக் கழகங்களில் மெய்யிலும் இறையியலும் பயின்றவரே.
1535 – இல் பாரிசில் பட்டம் பெற்றபோது புனித பீட்டர் பாவர், புனித பிரான்சிஸ் சவேரியார் உட்பட ஆறு இளைஞர்களதை; தவவாழ்வுக்குக் கொண்டு வந்தவரே.
ஏழுபேரும் தொடங்கிய புதிய துறவு சபைக்கு, திருத்தந்தை இரண்டாம் சின்னப்பரிடம் உடன்பாடு பெற்றவரே.
புதினாறே ஆண்டுகளில் நூறு இல்லங்களும் ஆயிரம் துறவியருமாகச் சபை பெருகியதைக் கண்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவரே.
மக்களுடைய ஈடேற்றத்துக்காக எல்லையற்ற ஆவல் கொண்டவரே.
அநேகமுறை திருக்காட்சிகளைக் காணும் பேறுபெற்றவரே.
ஞானப் போர்முறையைக் கண்டுபிடித்தவரே.
ஆன்மீக முயற்சிகளை உண்டாக்கியவரே.
மக்களை மீட்பதிலே உயர் நாட்டம் கொண்டிருக்கிற கருவூலமே.
நற்செய்தியின் ஆலோசனைகளைக் குறையற அனுசரித்தவரே.
குறையற்ற அறநெறியின் சிறந்த மாதிரியே.
இறை ஊழியத்தில் மிகுந்த பற்றுதலுள்ளவரே.
குருத்துவத்தின் பேரழகே.
பல்வேறு செபமுறைகளை ஞான வாழ்வில் அறிமுகப்படுத்தியவரே.
இளைஞர்களை அற வழியில் வளர்க்க கல்விப் பணி ஆற்றியவரே.
உலகப்பற்றினை வென்றவரே.
குற்றங்களைப் பொறுக்கின்றவரே.
இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் #8220;உலகுக்குத் தீ மூட்டுங்கள்!” என்று தூண்டியவரே
இறைவனுடைய திருவுளத்துக்குக் கீழ்ப்படிந்தவரே.
திரளான பாவிகளை நன்னெறியில் திருப்பினவரே.
யாவர்க்கும் அறிவுத் தெளிவுள்ள ஆசிரியரே.
புற்றுறுதியாளரை ஆதரிக்கிறவரே.
வானத்தூதர்களுக்கு நிகரானவரே.
பணிகளையெல்லாம் இறைவனின் அதிமிகப் புகழுக்காகவே செய்து முடித்து, 1556-ல் உயிர் நீத்த புனித இஞ்ஞாசியாரே.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு. ரூனெயளர் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
து. ரூனெயளர் புனித இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக

          புனிதரின் பேரின்பமாகிய இறைவா, உம்முடைய திருச்சபை பல்வேறு பிரிவினைக் கொள்கைகளால் அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் உம்முடைய திருப்பெயரின் மகிமையை எங்கும் பரப்பவும், திருச்சபையின் மறுமலர்ச்சிக்குக் கீழ்ப்படிதலுடன் ஒத்துழைக்கவும் புனித லொயோலா இஞ்ஞாசியாரை அழைத்தீரே. அவருக்காகவும் அவர் நிறுவிய சபைக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். அவருடைய எடுத்துக்காட்டாலும் உதவியாலும் நாங்கள் எல்லாத் தீமைகளையும் எதிர்த்து வீரத்துடன் போராடவும். நுpறைவாழ்வாம் வெற்றிவாகையைப் பெற்றுக் கொள்ளவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென்.

 

புனித சவேரியார் மூலம் கேட்கும் பத்து மன்றாட்டு

1.       மெய் மறைக்கு ஓர் அழியாத வைரத்தூணாகிய புனித சவேரியாரே! இறைமக்கள் அனைவரும் திருமறையில் நிலைகொண்டு அதன்படி இறைவனுக்கு ஏற்ப அறநெறியைக் கடைப்பிடிக்கவும் ஆண்டவர் இறைமக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் அருளவும், இறைவனின் கருணையை மன்றாட உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

2.       எங்களுக்குக் காவலுமாய் அன்புள்ள தந்தையுமாயிருக்கிற புனித சவேரியாரே! இந்த பாரதத் திருச்சபை எப்போழுதும் உண்மை நெறி தவறாதிருக்கவும், சுற்றிலும் சூழ்ந்துள்ள தீமை இருளில் நுழையாமல் அற ஒளிவீசி விளங்கவும், இறைவனின் கருணையால் நாளுக்கு நாள் வளர இறைவனை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

3.       சிறந்த போதகரான புனித சவேரியாரே! நீர் புனித இஞ்ஞாசியாருக்கு உகந்த சீடராகி அற நெறியில் நடந்து, எல்லா கடின தவத்தையும் செய்து கொண்டு அனைவருக்கும் நன்மாதிரியாய் விளங்கினீரே. பாரதக் குருக்கள் எல்லாரும், உம்மைப்போல, நற்பண்புகளினாலே அழகு பெற்று, தங்கள் போதனையினாலும், மாதிரியையினாலும் அற வழியைக் காண்பித்துக் கொண்டு வர அவர்களுக்கு வேண்டிய திருவருளையும் உடல் நலத்தையும் இறைவன் அருள நீர் பரிந்து பேசும்படி உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

4.      பாரதத் திருச்சபைக்கு உதவியும் தஞ்சமுமாயிருக்கிற புனித சவேரியாரே! திருச்சபைக்கு உதவி செய்கிறவர்களை இறைவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்கியருளவும், மறை ஊழியத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வேதியர், ஆசிரியர் முதலானோர் தங்கள் கடமைகளைத் தக்கபடி ஆற்றிட, இறைவனிடம் பரிந்து பேச வேண்டும் என்று உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

5.       பவ இருளைப் பல நாடுகளில் நீக்கினவராகிய புனித சவேரியாரே! பாரத நாட்டிலும் உலகமெங்கும் தீய சக்திகளின் ஆதிக்கம் ஒழிந்து, திருமறை எங்கும் பரவவும், திருச்சபையை எதிர்ப்பவர்களுக்கு இறைவன் நல்ல மனத்தைக் கொடுத்தருளவும் அவரை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.   – பர., அருள்., திரி.

6.       பல்லாயிரம் பேருக்கு திருமுழுக்குக் கொடுத்த புனித சவேரியாரே! புறமதத்தினர் மெய்மறையை அறிந்து திருமுழுக்குப் பெற்றுத் திருச்சபையின் மீட்புப் பேற்றினைப் பெற திவ்விய மீட்பரை மன்றாட வேணுமென்று உம்மை வேண்டுகிறோம்.     – பர., அருள்., திரி.

7.       கிறிஸ்துவர்களை மெய்மறையின்படியே நடத்தி ஈடேற்றவும், பாவிகளை அற நெறியிலே திருப்பவும் மிகவும் பாடுபட்ட புனித சவேரியாரே! மெய்மறையை அறிந்தவர்கள் எல்லாரும் அதன் உயர் நெறியை அனுசரிக்கவும், நன்னெறி தவறினோர் மனந்திரும்பவும் இறைவனிடம் மன்றாட வேணுமென்று உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

8.       மக்களுடைய இன்னல்களை விலக்கவும், ஆபத்தினின்று பலரை மீட்கவும், வியப்புக்குரிய புதுமைகளைச் செய்தவராகிய புனித சவேரியாரே! இறைவன் கருணை கூர்ந்து பஞ்சம், படை, நோய், பெருவாரிக் காய்ச்சல், வைசூரி, இடி, பெருங்காற்று முதலிய துன்பங்கள் எளியோரை அணுக விடாமல் விலக்கவும், எல்லாத் தீமைகளினின்றும் எங்களைக் காத்து, துயரப்படுகிறவர்களுடைய துயரெல்லாம் தீர்த்து அவர்களைத் தேற்றவும், இறைவனின் கருணையை மன்றாட வேணுமென்று உம்மை வேண்டுகிறோம்.
– பர., அருள்., திரி.

9.       இறப்பு வேளையில் திரளான மக்களுக்கு நன்மரணமடைய உதவி செய்து கொண்டு வந்த புனித சவேரியாரே! நாங்கள் எல்லோரும்; பாவமில்லாமல் அறவழியிலே நடந்து நல்ல சாவையடைந்து பேரின்ப விண்ணுலக அரசிலே சேர எங்களுக்காக மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

10.      புனித சவேரியாரே! நீர் பத்தாண்டு காலமாய்ப் பாரத நாட்டில் பரமனின் திருமறையை நிறுவப் பாடுபட்டு கடைசியாய் வெள்ளிக் கிழமையில் நன் மரணம் அடைந்ததினால் உமது பெயரைக் குறித்து பத்து வெள்ளிக் கிழமையைக் கொண்டாடுகிறவர்கள் எல்லாரும் நினைத்த நற்செயல்கள் நிறைவேறவும். மண்ணுலகில் இருக்குமளவும் இறைவனுக்குப் பத்தியோடே பணிபுரிந்து, உமது மன்றாட்டின் உதவியால், இறைவனின் பேரின்ப வீட்டில் உம்மோடு முடிவில்லாத காலம் வாழ்ந்திருக்கவும் எமக்காகப் பரிந்து பேச உம்மை வேண்டுகிறோம். – பர., அருள்., திரி.

 

மக்கள் மனந்திரும்புவதற்காக புனித சவேரியாரின் செபம்

என்றென்றும் வாழ்பவரும் எல்லாவற்றையும் படைத்தவருமாயிருக்கிற இறைவா! எல்லா மக்களும் உம்முடைய சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறதை நினைத்தருளும். இதோ! உம் மகத்துவத்துக்கு எதிராக பலர் அழிவடைகிறார்கள். ஆ! சுவாமி உம் ஒரே மைந்தனாகிய இயேசு அவர்களை மீட்பதற்காகத் தம்முடைய விலை மதியாத திரு இரத்தத்தைச் சிந்தி எண்ணிலா வேதனைகளை அனுபவித்துக் கொடிய சாவை அடைந்ததை நினைத்தருளும். ஆண்டவரே! அனைவருடைய திவ்விய மீட்பராகிய உம்முடைய திரு மைந்தனை அவர்கள் தங்கள் தீச்செயல்களினால் பிடிவாதமாய்  நிந்திக்க விடாமல் புனிதர் அனைவரின் மன்றாட்டுகளினாலும், உம்முடைய திருச்சபையின் வேண்டுதலினாலும், மனந்திரும்பச் செய்தருளும். உம்மால் அனுப்பப்பட்டவரும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மெய்யங்கடவுளாக அவர்கள் ஏற்று வணங்கச் செய்தருளும். உமக்கும் எங்களை மீட்ட அந்தத் திவ்விய ஆண்டவருக்கும் தூய ஆவியாருக்கும் முடிவில்லாத காலமும் புகழ் உண்டாகக் கடவது ரூனெயளர் ஆமென்.

தவறாது பலன் தரும் புனித சசேரியாருடைய நவநாள் செபம்

மிகவும் வணக்கத்துக்குரியவரும், இறையன்பு நிறைந்தவருமான புனித சவேரியாரே! உம்மோடு கூட நெடுஞ்சாண்கிடையாக திவ்விய சந்நிதானத்தைத தொழுகிறேன். இறைவன் உம்மை இவ்வுலகில் பல வரங்களாலும், சாவுக்குப் பிறகு முடிவில்லாத மணிமுடியாலும் அணி செய்தார் என்கிற உண்மை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி கூறி உமது வல்லமையுள்ள மன்றாட்டால் எனக்கு மிகத் தேவையான நல்ல வாழ்க்கையையும், நல்ல சாவையும், அத்தோடு கூட இறைவனின் திருவுளத்துக்கும் மகிமைக்கும் ஒத்திருக்குமாகில், (வேண்டிய வரத்தைக் கேட்கவும்) எனக்கு அடைந்தருள வேணுமென்று மன்றாடுகிறேன். – 3 பர., 3 அருள்., 3 திரி.

செபிப்போமாக

இறைவா! புனித சவேரியாரின் போதனையாலும், புதுமைகளாலும் பாரத நாட்டு மக்களை உமது திருச்சபைக்கு அழைக்கத் திருவுளமானீரே: அவருடைய புகழைக் கொண்டாடுகிற நாங்கள் அவரது நன்மாதிரியைப் பின்பற்றி வாழ வரமருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென்.

ஓ என் இறைவா! நான் உம்மை அன்பு செய்கிறேன். நீர் என்னை மீட்பீர் என்பதற்காக அல்ல, அல்லது உம்மை அன்பு செய்யாதவர்களை முடிவில்லாத தீயில் தள்ளித் தண்டிப்பீர் என்பதற்காகவும் அல்ல : ஆனால் என் இயேசுவே, ஆணிகளாலும், ஈட்டிகளாலும், நிந்தை அவமானங்களாலும் கொடிய வேதனைகளுக்குள்ளாகி பாவியாகிய எனக்காக, ஆம், எனக்காகவே உமது உயிரையும் கொடுத்தீர். அப்படியானால் உம்மை நான் அன்பு செய்ய மாட்டேனா? ஓ மகா அன்பு நிறைந்த இயேசுவே! விண்ணுலகை விரும்பியாவது, நரகத்துக்கு அஞ்சியாவது, வேறு எந்த கைம்மாற்றை நம்பியாவது நான் உம்மை அன்பு செய்யாமல், நீர் எவ்விதம் என்னை அன்பு செய்தீரோ அவ்விதமே நானும் உம்மை அன்பு செய்கிறேன். ஏனெனில் நீரே என் அரசர். நீரே என் இறைவன்!.

புனித சவேரியார் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித இஞ்ஞாசியாரே
புனித இஞ்ஞாசியாருக்கு சமமான தகுதியும். அன்புமுள்ள ஞான மகனாகிய புனித சவேரியாரே.
பாரதநாட்டின் அப்போஸ்தலரே.
ஸ்பெய்னில் நவார் பகுதியில் பிறந்தவரான புனித சவேரியாரே.
#8220;ஒருவர் உலகமுழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” என்ற அறிவுரையைப் புனித இஞ்ஞாசியார் அடிக்கடி கூறியதால், இறைப் பணிக்கு உம்மையே அர்ப்பணித்தவரே.
31 வயதில் குருவாகத் திருநிலை பெற்றவரே.
40 நாள்கள் கடுமையான ஒருசந்தி, ஆன்மீகத் தயாரிப்புக்குப் பின் முதற் பூசை நிறைவேற்றியவரே.
புனித இஞ்ஞாசியாரின் செயலராக உழைத்து வந்தவரே.
இந்திய நாட்டுக்குச் செல்லும்படிக் கட்டளைபெற்றதும், மறுநாளே பயணத்தைத் தொடங்கியவரே.
ஆல்ப்ஸ் வழியாகவும் ஸ்பெயின் வழியாகவும் மூன்று மாதங்கள் பயணம் செய்து, லிஸ்பன் துறைமுகத்தை அடைந்தவரே.
புதிமூன்று மாதங்களாகப் பயணம் செய்து, பதினோராயிரம் மைல் கடற்பயணத்தை மேற்கொண்டவரே.
பலநூறு பயணிகள் நோயுற்றபோது, அவர்களுக்கு உதவி செய்து, திருவுரையாற்றி, மறைக்கல்வி போதித்தவரே.
ஈராண்டுகள் கார்மணற்றுறைப் பகுதியில் உழைத்து, பரதகுலப் பெருமக்கள் அனைவரையும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்தவரே.
கையில் சிறுமணிகொண்டு ஒலியெழுப்பி, சிறுவர்களையும் தாய்மார்களையும் கோவிலுக்கு அழைத்து வந்து மறைக்கல்வி ஊட்டியவரே.
இலங்கை, மலாக்கா, இந்தோசீனம், பிலிப்பின்ஸ் வழியாக ஜப்பான் வரை சென்று போதித்தவரே.
சீனாவுக்குள் நுழையும் வாய்ப்புக்காக சான்சியன் தீவில் தங்கியிருந்தபோது, நோய் வாய்ப்பட்டு, 46-வது வயதில் இறந்தவரே
பத்தாண்டுத் தூதுப் பணியில் 50 ஆட்சிப் பகுதிகளில், பத்து இலட்சம் பேரை இறையரசில் சேர்த்தவரே.
இந்திய நாடுகளின் அப்போஸ்தலர் என்ற சிறப்புப் பெயருடன், விசுவாசப் பரம்புதல் சபையின் பாதுகாவலராய் நியமிக்கப்பட்டவரே.
மறைப்பணியாளருக்குரிய ஞானத்துக்கும், புனிதத்துக்கும் உத்தம மாதிரியே.
குருடருக்குப் பார்வை கொடுப்பவரே.
சப்பாணிகளின் ஊனந் தீர்ப்பவரே.
நோயாளிகளுக்கு உடல் நலம் அளிப்பவரே.
பஞ்சம், படை, நோயில் ஆதரவே.
பிசாசுகளை ஓட்டுபவரே.
சிலுவையால் எதிரிகளின் படையைத் துரத்தினவரே.
இறந்தவர்களை உயிர்ப்பித்தவரே.
கடலையும், புயலையும் கீழ்ப்படுத்தி அடக்கும் வல்லமையை கொண்டவரே.
வறியவருக்கு அடைக்கலமே.
துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே.
பாரத நாட்டிற்று ஒளிச்சுடரே.
பல மொழிகளில் உண்மையை அறிக்கையிட்ட மறை வல்லுநரே.
சொல், செயல், சிந்தனையில் தூய்மை மிக்கவரே.
அனைத்துப் புனிதர்களுடைய நற்பண்புகளினால் அணி செய்யப்பட்டவரே.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு. ரூனெயளர் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
து. ரூனெயளர் புனித சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

செபிப்போமாக

          அன்பின் இறiவா, வாழ்வளிக்கும் உம் திருமகளின் நற்செய்தியை நாங்கள் எங்கள் மக்களுக்கு அறிவிக்க புனித பிரான்சிஸ்கு சவேரியாரை அனுப்பத் திருவுளமானீர். அவருடைய அயரா உழைப்பினால் பல்வேறு நாட்டு மக்களை உமக்குச் சொந்தமாக்கிக் கொண்டதற்காக நன்றியுடன் உம்மைப் புகழ்கிறோம். அவருடைய மன்றாட்டினால் நாங்கள் உம் அருளாற்றலோடு ஒத்துழைத்து, எங்கள் நற்செய்தி வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவும், உமது அருள்வாக்கை ஏற்று, அதற்குத் துணிவுடன் சான்று பகரவும் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென்.

புனித அருளானந்தர் நவநாள் செபம்

செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும்

மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். ரூனெயளர் ஆமென்.
(தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)

புனித அருளானந்தருக்குச் செபம்

கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.

புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர்.

ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக!

இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். ரூனெயளர் ஆமென்.

புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே.
மறைசாட்சியான புனித அருளானந்தரே.
போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே.
அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் #8220;வானத்தூதர்” என்றும், #8220;மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே.
இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே.
புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே.
உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே.
பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே.
1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல்மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே.
கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே.
14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே.
தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே.
வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே.
பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே.
கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே.
குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே.
துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு. துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே.
தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே.
பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே.
மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே.
சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே.
உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.
உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே.
உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே.
எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே.
சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே.
புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே.ழூ
மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே.
கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே.
மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே.
ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே.
எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே
மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே.
அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே.
தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே.
தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.ழூ
விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே.
உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே.
ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே.
மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே.
உலகின் பாவங்களைப் போக்குகிறரூhநடடip;ரூhநடடip; மற்றதும்.
மு. ரூனெயளர் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி.
து. ரூனெயளர் புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக
மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென்.