பாத்திமா ஆசிரமம்

அமலிவனத்தின் அருகில் அமைந்துள்ள செபமாலை மாதா ஆழ்நிலைத் தியானத்துறவு சபையானது இந்தியாவில் முதன்முதலாக வடக்கன்குளத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. சுவக்கின் அடிகளார் காலத்தில் தவத்திரு தந்தை அந்தோனி சூசை நாதர் அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டது. முதன்முதலாக புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பமாகியது. அதன் பின்பு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அவர்களால் அமலிவனம் அருகில் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவர்களின் கடின உழைப்பின் காரணமாக இன்று தென்னகத்திலேயே பிரபல ஆசிரமமாக வளர்ச்சியடைந்துள்ளது.

For More Details please vist   www.antonysusainather.org